வடக்கு கிழக்கில் பொது வாக்கெடுப்பு – ஜெனிவாவில் கோரவுள்ளார் சிவாஜிலிங்கம்!

வடக்கு கிழக்கில் அரசியல் தீர்வுக்காக பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டதொடரில் இதை வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜேவிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுச்சபையிலும் அமர்வுகளிலும் இதனை வலியுறுத்துவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!