நேற்று உயிரிழந்தவர் கொரோனாவால் அல்ல. பிழையான தகவல் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 13ஆவது நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.

பஹ்ரைனில் இருந்து கடந்த 02 ஆம் திகதி வந்த குறித்த நபர் சிலாபம், அம்பகஹவில தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த நபர் செப்டம்பர் 9 ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. ஆனால் அவர் கொரோனாவால் உயிரிழந்ததாக பரப்பப்பட்ட தகவல் பிழையான தகவல் எனவும் இவ்வாறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!