20வது திருத்தத்தை உருவாக்கியவன் என்ற அடிப்படையில் அதற்கான பொறுப்பை ஏற்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என அமைச்சர் மகிந்த அமரவீர கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அமைச்சரவைக்கூட்டம் இடம்பெற்றது.இதன்போதே ஜனாதிபதி மேற்படி பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் 20வது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மீளாய்வுகுழுவின் அறிக்கை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
20வது திருத்தம் தற்காலிக நடவடிக்கை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் புதிய அரசமைப்பு துரிதவேகத்தில் முன்வைக்கப்படும் என தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!