ரவி, அலோசியஸ்க்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸிற்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை இலஞ்சமாக குத்தகைக்கு எடுத்தது உட்பட 06 குற்றச்சாட்டுகளில் கீழ் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!