அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு நீதிமன்றம் கட்டளை!

அரச அதிகாரிகளை கடமையைச் செய்யவிடாமல் தடுத்தமை தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் கட்டளை அனுப்பியுள்ளது.

இதன்படி எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னதாக நீதிமன்றத்திற்கு வந்து அல்லது பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் அளிக்கும்படி அறிவிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!