அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி முள்ளிவட்டுவான் மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிவட்டுவான் பிரதேச மக்கள் தங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு கோரி புதன்கிழமை கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முள்ளிவட்டுவான் பாலர் பாடசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட பிரதேச மக்கள் தங்கள் பிரதேசத்திற்கான பொது மயானம், விளையாட்டு மைதானம் போன்றன இல்லாமைக்கும் குடி நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருவதோடு யானை வேலி அமைத்துத் தருமாறும், குடியிருப்பு காணிகள் வன இலாகாவினால் சுவீகரித்தல் போன்றவற்றை தடுக்குமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச மக்கள் கிழக்கு மாகாண ஆளுனர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், ஓட்டமாவடி பிரசே சபை தவிசாளர் ஆகியோருக்கான மகஜரினை ஓட்டமாவடி பிரதேச சபையின் வாகனேரி வட்டாரத்திற்கான உறுப்பினர் வைரமுத்து யோகேஸ்வரனிடம் கையளித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!