இரா.சம்பந்தனின் உடல் நிலை மோசம்? வெளிவந்த தகவல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உடல்நலக் குறைவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவரது உடல் நிலை மிக பலவீனமாகியுள்ளதாக தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அவரை வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் பாராளுமன்ற அமர்வுகளிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பந்தனின் உடல் நல குறைவால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய பேச்சாளர் தெரிவு தாமதமாகி வருகிறது.

கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றம் கூடி, புதிய பேச்சாளரை தெரிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் சம்பந்தனின் உடல் நல குறைவினால் கூட்டம் நடைபெறவில்லை ன்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!