ரியாஜ் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய போதிய ஆதாரங்கள் இல்லை!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஐந்து மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரியாஜ் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!