யாழில் தனிமைப்படுத்தப்பட்டோரின் முடிவுகள் இன்று மாலை!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மற்றும் புங்குடுதீவு உள்ளிட்ட தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள சுமார் நூற்றிக்கும் மேற்பட்டவர்களுடைய கொரோனா பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (05) மாலை வெளியாகும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தொிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

“இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணியதற்காக வடமராட்சி கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை விவகாரத்தால் புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுமார் நூற்றிற்கும் மேற்பட்டவர்களுடைய கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும்.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!