பரீட்சைகள் குறித்து நாளை இறுதி தீர்மானம்!

க.பொ.த (உ/த) மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்துவதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (06) ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

எனினும் குறித்த இரு நாட்களிலும் பரீட்சையை நாட்டதுவது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை (07) மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!