ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சை என்பன திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு இன்று (07) சற்றுமுன் தமது இறுதி முடிவை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா சமூகத் தொற்றின் இரண்டாம் அலை வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால் பரீட்சைகள் தொடர்பில் குழப்பம் எழுந்திருந்தது.
இன்றை அறிவிப்பின்படி திட்டமிட்டவாறு ஒக்டோபர் 11ம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.
அத்துடன் 12ம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!