மதுபான விற்பனை உணவகங்களை மூட உத்தரவு!

மதுபானங்களை விற்பனை செய்யும் உணவகங்கள் மற்றும் கள்ளுத் தவறணைகளை மூடுமாறு சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நிலைமை காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்ததாக கலால்வரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆரியதாச போதரகம தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மதுபானசாலைகளை மூடுவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!