வெளியேற்றப்பட்டார் முஷாரப்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலிருந்து, ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் முஷாரப் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முஷாரப் எம்.பியும் கலந்து கொண்டார். எனினும், “20” ஆவது திருத்தத்தின் 17ஆவது பிரிவுக்கு ஆதரவாக வாக்களித்த முஷாரப்பை வெளியேற்ற வேண்டும் என மரிக்கார் எம்.பி. வலியுறுத்தினார். இதற்கு ஏனைய எம்.பிக்களும் ஆதரவு வழங்கினர். இதனையடுத்தே ரிஷாத் கட்சி உறுப்பினர் வெளியேற்றப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!