கோரிக்கைகள் நிறைவேறா விட்டால் தொழிற்சங்க நடவடிக்கை – 48 மணி நேர கெடு வைத்து எச்சரிக்கை!

தமது கோரிக்கைகளை 48 மணி நேரத்தில் அரசு நிறைவேற்ற மறுத்தால் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொது சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போக்குவரத்து மற்றும் உணவு தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (27) காலை சுகாதார அமைச்சரை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.

இதன்படி 48 மணி நேர காலக்கெடுவுக்குள் கோரிக்கைள் நிறைவேறாது விட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று குறித்த சங்கம் எச்சரித்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!