மகனுக்குத் திருமணமா? – பொலிசுக்கு சென்றார் இராதாகிருஸ்ணன்!

தனது மகனுக்கு நேற்று திருமணம் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட போலியான செய்திகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், அவரது மகனுக்கு திருமண வைபவம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!