பசில் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு : இராதாகிருஸ்ணன்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படுவதில் தமக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான நீதியை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!