நாட்டை முடக்க முடியாது! – ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு.

கொரோனா வைரசிற்கு தீர்வு காணப்படும் வரை நாட்டை முடக்க தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொரோனா வைரசிற்கு உரிய தீர்வை காணும்வரை நாட்டை முடக்கி வைத்திருப்பது சாத்தியமில்லை என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊரடங்கினை பிறப்பிப்பதன் மூலம் மாத்திரம் மக்களின் நடவடிக்கைகளை தீர்மானிக்க முடியாது. சுகாதார வழிமுறைகளை பின்பற்றியபடி மக்கள் தங்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தயராகவேண்டும். கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டத்தினை கடுமையான நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாரை ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!