ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: முதலமைச்சர் பழனிசாமி அதிரடி!

நீலகிரி, திருப்பூரில் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை சென்னையில் இருந்து கோவை புறப்பட்டு சென்றார். கோவை விமானநிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- கோவை மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது.

உக்கடம் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1 கி.மீ. நீளத்திற்கு மேம்பாலப் பணிகள் நடக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும், விளையாட்டில் ஈடுபட்டால் குற்றவாளிகளாக கருதப்படுவர்.

7 பேர் விடுதலைக்கு குரல் கொடுத்தது அதிமுக அரசு தான். பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. வேல் யாத்திரைக்கு சட்டரீதியாக அனுமதி வழங்க முடியாது. பள்ளி திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்ட பிறகு முடிவு எடுக்கப்படும். இந்தியாவில் யார் வேண்டுமானலும் கட்சி தொடங்கலாம்.

இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!