வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!

நாட்டின், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்து அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கபட்டுள்ளது.

இதன்படி, குறித்த பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும், சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

மேலும், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கரையோர பகுதிகளில் காலை வேளைகளில் மழையுடனான வானிலை காணப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இடியுடன் கூடிய மழை யய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும், இதனால் ஏற்படும் அனர்தங்கள் மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!