அரச ஊழியர்களுக்கு கட்டுப்பாடு – இனி உள்நாட்டு ஆடைகளையே அணிய வேண்டும்!

அரச ஊழியர்கள் அடுத்த ஆண்டு முதல் பற்றிக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடைகளையே அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டம் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கையின் புடவை உற்பத்திக் கைத்தொழிலில் நில வும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, நாடெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்புக் கலைஞர்களின் துணை யுடன் புதிய வடிவங்களை அறிமுகம் செய்யப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!