வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் துப்புரவு பணி – படையினர் குவிப்பு!

முல்லைத்தீவு – வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில், சிரமதானம் செய்யும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை சூழ படையினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் மக்கள் ஆகியோர் இணைந்து இந்த துப்பரவு பணியினை முன்னெடுத்தனர். இதன் போது வன்னிவிளாங்குளம் வீதி முழுவதும் பொலிசார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வீதியால் செல்பவர்களை விசாரிக்கும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!