டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் குறித்து தமிழக முதல்வர் நாளை மறுநாள் ஆலோசனை!

தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். நவம்பர் மாதத்துக்கான ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வருகிறது. கடைசியாக திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்க மத ரீதியான விழாக்கள், அரசியல் கூட்டங்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் குறித்து நாளை மறுநாள் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் சூழலில், அடுத்தக் கட்ட தளர்வுகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!