காரைநகர், கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கும், கிளிநொச்சி கரைச்சியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

காரைநகரில் 40 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் கொழும்பிலிருந்து வருகை தந்த அவரை சுகாதாரத் துறையினர் சுயதனிமைப்படுத்தலில் வைத்துக் கண்காணித்தனர். அவரது மாதிரிகள் பெறப்பட்டு யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சியில் குடிதண்ணீர் போத்தல் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனத்தின் வாகனச் சாரதிக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!