நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரக் குழுவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய மூன்று உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமல் ராஜபக்ச, விஜித ஹேரத் ஆகியோர் இந்தக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் நேற்று அறிவித்தார்.
123 ஆம் இலக்க, புதிய நிலையியல் கட்டளைகளின் அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
புதிய நிலையியல் கட்டளைகளின் படி, சபாநாயகர், பிரதமர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இந்த அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.
இவர்களுடன் சபாநாயகரினால் நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்களும் இந்தக் குழுவில் இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!