கோவிட்-19: உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 6.30 கோடியாக உயர்வு!

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கி உள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,30,48,487 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,35,26,888 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 64 ஆயிரத்து 743 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,80,56,856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,376 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -16,46,192

இங்கிலாந்து – 16,17,327

இத்தாலி – 15,85,178

அர்ஜென்டினா – 14,18,807

கொலம்பியா – 13,08,376

மெக்சிகோ – 11,00,683

ஜெர்மனி – 10,55,607

போலந்து – 9,85,075

பெரு – 9,62,530

ஈரான்- 9,48,749

தென்னாப்பிரிக்கா – 7,87,702

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!