வடக்கு மாகாணத்தில் 27 தொற்றாளர்கள்!

வடக்கு மாகாணத்தில் நவம்பர் மாதத்தில் 27 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவர்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 8 பேரும் மன்னார் மாவட்டத்தில் 4 பேரும் முல்லைத்தீவில் 2 பேருமாக மொத்தமாக நவம்பர் மாதத்தில் 27 பேர் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் என இனங்காணப்பட்டுள்ளார்கள்.

நவம்பர் மாதத்தில் வடக்கு மாகாணத்தில் 7682 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன இவர்களில் 27 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள் என்ற இனங்காணப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் பிரதேசத்தில் கடந்த வாரம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குரிய பிசிஆர் பரிசோதனைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கிடைக்கின்ற முடிவுகளின் பிரகாரம் அடுத்த கட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!