கிளிநொச்சியில் 11ஆம் தர மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் ஆரம்பம்!

க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தனியார் வகுப்புகள் மீள் அறிவித்தல் வரும் வரை நடத்தப்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலின் அடிப்படையில், பல்வேறு சுகாதார விதிமுறைகளை பின்பற்றி க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை இன்று ஆரம்பிக்கும்படி அனைத்து பாடசாலைகளுக்கும் தகவல் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் ஏனைய வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி வரும் பி.சி.ஆர் பரிசோதனையை தொடர்ந்தே முடிவு எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!