கழுத்துப் பட்டி இறுகி மாணவி மரணம்!

ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி விளையாடிய சிறுமி கழுத்தில் இறுகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்ற முற்பகல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை, புலோலி- சாரையடியைச் சேர்ந்த ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாயாரும் தமையனும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமி தமையனின் கழுத்துப் பட்டியை எடுத்து யன்னல் பிணைச்சலில் கட்டி விளையாடியுள்ளார். இதன்போது, கழுத்துப்பட்டி இறுகியதால் மாணவி உயிரிழந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!