புரெவியால் வல்வெட்டித்துறையில் நால்வர் காயம்! – 50 குடும்பங்கள் இடம்பெயர்வு.

வல்வெட்டித்துறை ஆதிகோவிலை அண்மித்த பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் வீசிய கடும் காற்றால் நால்வர் காயமடைந்துள்ளனர். மூவர் வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

திடீரென வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல சேதமடைந்ததுடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றினால் பாதிக்கப்பட்டு 50 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி ஆலயம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!