கொழும்பில் இருந்து திரும்பிய பருத்தித்துறை வாசிக்கு கொரோனா!

பருத்தித்துறை – ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தனது உறவினர் ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்புக்குச் சென்று அங்கு ஒரு மாதம் தங்கியிருந்து விட்டு திரும்பிய 34 வயதுடைய குடும்பத்தலைவருக்கே கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் குடும்பத்துடன் கடந்த 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அந்த குடும்பத்தலைவரின் மாதிரிகள் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அவர் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்படவுள்ளார். அவரது குடும்பம் தொடர்ந்து சுயதனிமைப்படுவார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!