நேற்று 649 புதிய தொற்றாளர்கள்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 649 தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில், 451 பேர், பேலியகொட கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும், 197 பேர் சிறைச்சாலைக் கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இலங்கையில் இதுவரை இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, 27 ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!