யாழ்ப்பாணம், மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் பெண்கள் வாகனங்களில் மாறி மாறி அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதைப் பொலிஸாரும் கண்டும் காணாதது போன்று உள்ளனர் என்று மாநகர சபையின் பெண் உறுப்பினர் ஒருவர் நேற்று சபையில் சுட்டிக்காட்டினர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் பெண்கள் தொடர்பான நிலையியல் குழுவின் தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அதன்போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதிகளில் இரவு நேரத்தில் 8 மணி தொடக்கம் சுமார் 10 பெண்கள் ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதைப் பொலிஸார் கண்டும் காணாமல் இருக்கின்றனர். அவர்களும் இதற்கு உடந்தையா என்று சந்தேகம் என்று தோன்றுகின்றது என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!