யாழ். நகரில் வாகனங்களில் மாறி மாறி அழைத்துச் செல்லப்படும் பெண்கள்! – கண்டும் காணாத பொலிஸ்

யாழ்ப்­பா­ணம், மாந­கர சபைக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் இரவு வேளை­க­ளில் பெண்­கள் வாக­னங்­க­ளில் மாறி மாறி அழைத்­துச் செல்­லப்­ப­டு­கின்­ற­னர். அதைப் பொலி­ஸா­ரும் கண்­டும் காணா­தது போன்று உள்­ள­னர் என்று மாந­கர சபை­யின் பெண் உறுப்பி­னர் ஒருவர் நேற்று சபையில் சுட்­டிக்­காட்­டி­னர். யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் அமர்வு நேற்று நடை­பெற்­றது. அதில் பெண்­கள் தொடர்­பான நிலை­யி­யல் குழு­வின் தேவை­கள் தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது. அதன்­போதே அவர் இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­னார்.

யாழ்ப்­பா­ணம் நகரை அண்­டிய பகு­தி­க­ளில் இரவு நேரத்­தில் 8 மணி தொடக்­கம் சுமார் 10 பெண்­கள் ஒரு வாக­னத்­தில் அழைத்­துச் செல்­லப்­ப­டு­கின்­ற­னர். அதைப் பொலி­ஸார் கண்­டும் காணா­மல் இருக்­கின்­ற­னர். அவர்­க­ளும் இதற்கு உடந்­தையா என்று சந்­தே­கம் என்று தோன்­று­கின்­றது என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!