நாட்டின் இன்றைய காலநிலை….

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிழக்கு மாகணம் மற்றும் யாழ்ப்பாணம், முல்லைதீவு மற்றும் பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஏனைய பகுதிகளுக்கு பிற்பகல் வேளையில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து வீசுமென்பதுடன், மின்னல் தாக்கங்களில் இருந்து அவதானமாக செயற்படுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!