5 பெண் செயற்பாட்டாளர்கள் துப்பாக்கி முனையில் கூட்டு வன்புணர்வு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடத்தலுக்கு எதிராக வீதியோர நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஐந்து பெண் மனிதஉரிமை செயற்பாட்டாளர்களை, கடத்திச்சென்று கூட்டு வன்புணர்வுக்கு உற்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த 5 இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை சம்பவம் தொர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்பட்வில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தில் கடத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பெண்கள் சிலர் பணியாற்றி வந்துள்ளனர்.

.இந்நிலையில் தெருவோர நாடகம் நடத்தி முடித்த பின்னர் அவர்கள் ஒரு மிஷனரி பள்ளிக்குச் சென்றனர். அப்போது பள்ளிக்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய சிலர், குறித்த பெண்கள் குழுவில் இருந்த ஐந்து பெண்களை கடத்தி, காட்டு பகுதிக்கு கொண்டு சென்று வன்புணர்வு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களும் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாகவும். அவர்களுக்கு வைத்திய பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன எனினும் அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.

இப்பகுதியில் “வெளியாட்கள்” நுழைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவுக்கும் ஒரு குழுவின் ஆதரவாளர்கள் இந்த பாலியல் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேசிக்கின்றனர்.

குறித்த மாவட்டத்தின் பழங்குடி மக்களிடையே செல்வாக்கையும் ஆதரவையும் கொண்டிருக்கும் அந்தக் குழு, வெளியிடங்களை சேர்ந்தவர்கள் இப்பகுதிக்குள் நுழைவதற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிவிப்புப் பலகைகளையும் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு இந்தியாவில் சுமார் 40,000 வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன.

வன்புணர்வு மற்றும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக வெளியில் கூறுவது அவமானம் என்றும் களங்கம் என்றும் நம்பப்படுவதால், பல வன்புணர்வு சம்பவங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை.

2012ஆம் ஆண்டு டெல்லியில் பேருந்தில் பயணித்த மாணவி வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்ததற்கு பின்னர், இந்தியாவில் பாலியல் வன்முறை தொடர்பான மீளாய்வுகள் அதிகரித்துள்ளன.

தற்போதைய சம்பவம் இந்தியாவில் தொடரும் பாலியல் வன்முறைகளின் சமீபத்திய சம்பவம் என்று கூறலாம்.

காஷ்மீரில் ஏப்ரல் மாதத்தில் சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மே மாதத்தில் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் மூன்று இளம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!