கள்ளக்காதலுக்காக கணவன், பிள்ளைகளை உயிரோடு எரித்துக்கொன்ற கொடூர தாய்!

உல்லாச வாழ்க்கைக்கு தடையாக இருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை, பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர தாயை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் 37 வயதான சசிகுமார். இவருக்கும் அதிபெரமனூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பிரியா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பிரதீப் என்ற 10 வயது மகனும், பிரித்திகா என்ற 8 வயது மகளும் உள்ளனர். குடும்ப வறுமையின் காரணமாக, சசிகுமார் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது, மனைவி மற்றும் பிள்ளைகளிடம் பேசுவதற்காக, விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதை பயன்படுத்தி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் பல ஆண் நண்பர்களுடன் பழகி, கணவன் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தில் அவர்களுடன் உல்லாசமாக வெளியில் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார் பிரியா.

இந்த நிலையில், தாயின் இந்த செயல் பற்றி, மகன் பிரதீப் வெளிநாட்டில் வேலை பார்க்கும் தனது தந்தையிடம் தெரிவிக்க, ஆத்திரமடைந்த அவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து வந்து, பிரியாவிடம் சண்டையிட்டுள்ளார். 4 மாதங்களாக கணவன் வீட்டில் இருப்பதால், வெளியில் எங்கும் சுற்ற முடியாத சூழலில் சிக்கித்தவித்த பிரியா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார்.

அதன்படி, கடந்த 8-ம் தேதி இரவு தூங்கும் போது, கட்டிலில் படுத்து உறங்கிகொண்டிருந்த கணவன் மற்றும் பிள்ளைகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சசிகுமார் முழுவதுமாக எரிந்து, சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்குப் போராடிய சசிகுமாரிடம், நீதிபதி வாக்குமூலம் பெற்றுள்ளார். பின்பு சசிகுமார் உயிரிழக்க, மகனும், மகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கணவன் கொலை தொடர்பாக பிரியாவை கைது செய்த போலீசார், அவரை வேலூர் சிறையில் அடைத்தனர். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட பெண், கணவன் மற்றும் பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!