கொரோனாவுக்கு மேலும் மூவர் பலி!

மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் வத்தள பகுதியை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மாத்தளை பகுதியை சேர்ந்த 76 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!