யாழ் மக்களுக்கு சுகாதாரத் தரப்பின் முக்கிய அறிவிப்பு!

மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு சென்றவர்கள் தமது விபரங்களை அறிவிக்குமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த இரு கிழமைக்குள் மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு சென்றவர்கள் தமது பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினருடன் அல்லது கிராம சேவை அலுவலகரிடம் தொடர்புகொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் தமது தகவல்களை உடனடியாகத் தெரிவிப்பதால் சமூகத் தொற்று தடுக்கப்படுவதுடன், அவர்கள் தமக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளையும் முன்னெடுக்க முடியும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் இவ்விடயம் தொடர்பாக தகவல் வழங்குவதில் தடங்கல்கள் இருப்பின் வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 012 222 6666 என்ற அவசர இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!