விமான விபத்து குறித்து ஆராய குழு நியமனம்!

விமானப் படையின் PT-6 பயிற்சி விமானம் நேற்று விபத்துக்குள்ளானது குறித்து ஆராய்வதற்கு விமானப்படை தளபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சீனக்குடாவில் இருந்து நேற்று பிற்பகல் பயணத்தை மேற்கொண்டிருந்த குறித்த விமானம் கந்தளாயில் உள்ள சூரியபுர – ஜனரஞ்சன வாவி பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. குறித்த விமானத்தில் சென்றிருந்த பயிற்சி பெறும் விமானி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்தநிலையில் இருந்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ருவென்வல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதான விமானியே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!