நத்தார் பண்டிகை தொடர்பாக பேராயர் மெல்கம் ரஞ்சித் விசேட அறிவிப்பு!

நத்தார் பண்டிகை விசேட ஆராதனை நிகழ்வுகளை சுகாதார வழிமுறைகளுடன் முன்னெடுக்குமாறு கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவிறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்படி தனிமைப்படுத்தல் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படாத பகுதிகளில் நத்தார் பண்டிகை விசேட ஆராதனை நிகழ்வுகளில் 50 க்கும் குறைவானவர்கள் மாத்திரமே பங்கேற்க வேண்டும் எனவும் கொழும்பு பேராயர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதேவேளை நத்தார் பண்டிகை விசேட ஆராதனை நிகழ்வுகளை காணொளி மூலமாக ஒளிபரப்பு மேற்கொள்வதறற்கான அனைத்து நடவடிககைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!