மீண்டும் தலைதூக்கினால் அழிப்போம்!

பயங்கரவாதமும் தீவிரவாதமும் மீண்டும் தலைதூக்கினால் அவை முற்றாக அழிக்கப்படும் என்று, பொது பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை உறுதி செய்து மக்கள் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழும் நிலையை உறுதி செய்யும் திறன் அரசாங்கத்திற்குள்ளது எனவும், அவர் கூறியுள்ளார்.

கண்டியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பலவீனமான நிலையில் காணப்பட்ட புலனாய்வு பிரிவுகோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் வலுப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவினர் சமீபத்தில் மேற்கொண்ட பல வெற்றிகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் போதைப்பொருள் கடத்தலை முறியடித்துள்ளனர், பயங்கரவாதமும் தீவிரவாதமும் மீண்டும் தலைதூக்கினால் அவை அழிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!