வசமாகச் சிக்கினார் வாசு!

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று எஹெலியகொடவிற்கு சென்றிருந்த போது, பொதுமக்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதால் பதற்ற நிலை உருவானது.

நீர்விநியோக திட்டமொன்றை ஆரம்பித்து வைப்பதற்காக அமைச்சர் எஹெலியகொடவிற்கு சென்றிருந்தார். அவ்வேளை தலப்பிட்டிய நகர மக்கள் வலவுத்த வீதியை மறித்து அமைச்சரின் பயணத்தினை தடுத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

தங்கள் பகுதி ஊடாக மற்றுமொரு நகரத்திற்கு நீர் விநியோக திட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்கு முன்னர் அமைச்சர் தங்கள் பகுதிக்கு உரிய நீர் விநியோகத்தினை வழங்கவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னரே, வாசுதேவ நாணயக்காரவினால் அங்கிருந்து வெளியேற முடிந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!