பிரான்சில் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய சிறுமியை கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற பெண்!

பிரான்சில் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய 8 வயது சிறுமியை 38 வயது பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24-ஆம் திகதி இரவு பிரான்சின் Limay (Yvelines) நகரில் வசிக்கும் 8 வயது சிறுமி ஒருவர், தன் பக்கத்து வீட்டி ல் வசிக்கும் 38 வயது பெண்ணிற்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

உடனே அப்பெண் திடீரென்று கத்தியால் சிறுமியை கண்மூடித்தனமாக குத்தியுள்ளார். சிறுமி மட்டுமின்றி, உடன் இருந்த 4 வயது சிறுவனையும் அப்பெண் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் அந்த சிறுமி சம்பவ இடத்திலே பரிதாபமாக துடி துடித்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த பொலிசார், சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, உயிரிழந்த சிறுமியின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை உடனடியாக கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியது தவறா? அதற்கு இப்படி ஒரு கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!