மாநகரை மாற்றியமைக்கும் போராட்டத்தை செய்வேன் – மணிவண்ணன்

யாழ் மாநகரை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை முடிந்தளவிற்கு முன்னெடுப்பேன் என்று மாநகர சபையின் புதிய முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று முதல்வராக பதவியேற்பின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

“தேர்தல் கால வாக்குறுதியாக என்னால் முன்வைக்கப்பட்ட யாழ்.நகர அபிவிருத்தித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடிய சூழல் தற்போது இல்லை என்றாலும் அதற்கான முயற்சிகளைத் நான் முன்னெடுக்கவுள்ளேன்” என தெரிவித்தார்.

இதேவேளை, முதல்வர் வேட்பாளராக களமிறங்கியமையை கட்சித் தலைமைப்பீடம் ஏற்றுக் கொள்ளுமா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது,

தன்னை யாரும் போட்டியிட வேண்டாம் என்று வலியுறுத்தவில்லை. ஆனோல்ட் மீண்டும் போட்டியிட்டால் அவரைத் தோற்கடிப்போம் என்று கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களில் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவரைத்தோற்கடிக்கும் நடவடிக்கையினையே தான் முன்னெடுத்ததாகவும் தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!