கடத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட தேரர் – கம்பஹாவில் பயங்கரம்!

கொழும்பு – ஹன்வெல்ல, கொடிகந்த காட்டு பகுதியில் கடந்த 3ம் திகதி கடத்தப்பட்ட உடுவில தர்மசிறி என்ற தேரர் (65-வயது) நேற்று (4) இரவு கம்பஹா – கொடன்தெனியாவ மயானத்தில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடத்தல் மற்றும் கொலை தொடர்பில் புதிய தேரர் ஒருவரின் பெற்றோர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தலில் 10 பேர் கொண்ட குழு ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், சம்வத்துடன் மேலும் பலருக்கு கொலையுடன் தொடர்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!