உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ராஜலட்சுமி, காவல்துறையினரிடம் அளித்த புகாரில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், பெண்கள் குறித்தும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவதூறாக பேசுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மீது, 4 பிரிவுகளின் கீழ் சென்னையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவதூறு பரப்புதல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!