வவுனியா வர்த்தகர்கள் பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகின :

வவுனியா மாவட்டத்தில் நகர வர்த்தகர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா நகர வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார பிரிவினரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதன் முடிவுகள் பகுதி பகுதியாக வெளியாகி வருகின்ற நிலையில் கடந்த 10 நாட்களுக்குள் 149 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வவுனியா முதலாம் குருக்குத்தெரு, கந்தசுவாமி கோவில் வீதி, சூசைப்பிள்ளையார் பகுதியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில வெளியாகியுள்ள நிலையில் 290 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்குள் 2500க்கு மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் 149 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 1200க்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், 1100 நபர்களின் பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.