வடக்கில் நேற்று 9 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதை தெரிவித்தார்.

மன்னாரில் கடந்த சில நாட்களில் கொரோனாவால் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புடைய 4 பேர் நேற்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், ஒருவர் காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவைச் சேர்ந்த 2 பெண்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பணியாற்றும் கடையைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டது. அதனால் குறித்த பெண்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்திய போது கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!