ரஞ்சனின் ஆசனம் வெற்றிடமானதாக அறிவிப்பு!

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக சட்டமா அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவரது ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!