இந்திய மீன்பிடிப் படகில் இருந்து 2 சடலங்கள் மீட்பு!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட, இந்திய மீன்பிடிப் படகு நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படைப் படகுடன் மோதி கடலில் மூழ்கியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடலில் மூழ்கிய மீனவப் படகினுள் இருந்து, கடற்படை சுழியோடிகள், இரு மீனவர்களின் சடலங்களையும் மீட்டு, காங்கேசன்துறை பொலிசார் மூலம் யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!