இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று!

இலங்கை அணியின் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடரில் விளையாடவுள்ள உத்தேச அணியில் பெயரிடப்பட்டுள்ள வீரர்கள் இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

குறித்த தொடரில் விளையாடவுள்ள அணி வீரர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு கொழும்பில் பயிற்சி பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குழு முறைமையில் பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை காரணமாக அனைத்து வீரர்களும் நேரடித் தொடர்பில் இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான வீரர்கள் இருவரும் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த வீரரர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய ஏனைய வீரர்கள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக, ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!